Posts

Showing posts from January 9, 2011

பள்ளிக்காலம்

Image
பள்ளிக்கால கனவுகள் பள்ளிக்கால கனவுகள் மீண்டும் தொடர்கின்றன... அவள் நினைவாக... முதன் முதலில் என் மனதை தொடமால் தொட்டு சரித்து விட்டு... உயிர்மெய்யெழுத்தாக என்னை கலங்க வைத்து சென்ற அந்தநாள் ... இனிமையான நினைவுகளாக மனமுழுவதும் தொடர்கின்றன...

தாய் பாசம்

Image
அம்மா உன்னை நினைத்து ! அவசரத்தில் கிளம்பி கொண்டிருந்தேன் ஆனாலும் என்னை கவிதை எழுத சொன்னாய் நினைக்கும்போது பாசம் மறக்காமல் இருக்க "நீ "என்று நீட்டாமல் விரலை நிதானமாக எழுதி வைத்து ஒற்றை எழுத்தாய் ஓடி வந்தேன் மூன்று வருட ஒப்பந்தத்தில் இங்கு வெளிநாட்டின் வேதனைக்கெல்லாம் விமோசனமாய் " நீ " தான் தாயே நினைக்கும்போது பாசம் மறக்காமல் இருக்க நினைத்து கொண்டேன் நான் எழுதிய கவிதை

நட்பு

Image
துடிக்க மறுக்கும் இருதயம் கூட நட்பு என்றவுடன் விழித்துக் கொள்கிறதே? நட்புக்கு பொருள் தேடி நீயென்று கண்டுக் கொண்டேன் உன்னைக் காணும் போது நாய்க்குட்டியாய் துள்ளும் இந்த மனது உன்னைப் பிரிகையில் தற்கொலைச் செய்துக் கொள்ளுதடி உன்னுடைய தவிர்ப்பில் தொடங்கியது என் முதல் தவிப்பு நீ என்னை நண்பனாக ஏற்றுக்கொள்ளும் வரை தொடர்கிறதடி....

நண்பேண்டா!!

Image
நண்பேண்டா!!  தாய் கருவில் இருக்கும் குழந்தையாய்! தந்தை தோளில் வளரும் செல்ல பிள்ளையாய் ! அன்புடன் அரவணைக்கும் சகோதரனாய் ! உறவேதும் இல்லாமல் உறவாட வந்தாய் ! என் கண்ணீரை துடைக்கும் கைக்குட்டை ஆனாய் சூராவளிகூட சுகமாக இருக்கும் ! நீ என்னுடன் இருந்தால் ...... இன்பத்திலும் துன்பத்திலும் கூட இருக்கும் தூணே பெருமை அடைகிறேன் நான் உன்னை என் நண்பனாய் பெற்றதற்கு!!............