Posts

Showing posts from August, 2022

அன்னமும்+பாலும்

Image
  அன்னப்பறவைகள் உண்மையாகவே நீரோடு கலந்த பாலில் இருந்து பாலை மட்டும் தனியே பிரித்து பருகுமா? இவ்வளவுநாளா எந்த பள்ளிக்கூடத்திலயும் சொல்லித்தரலயே. யாரோ புத்திசாலி ஆதாரப்பூர்வமாக சொல்லியிருக்கிறார். அன்னமும்+பாலும் அன்னம் பாலையும் தண்ணீரையும் பிரிக்கும் என்பது நமக்குப் பள்ளிக் கூடத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்ட விஷயம். ஏதோ அன்னப்பறவை என்று ஒன்று அந்தக்காலத்தில் இருந்ததாகவும், அது தண்ணீர் கலந்த பாலை வைத்தால் தண்ணீரைப் பிரித்து அப்படியே பாலை மட்டும் உறிஞ்சி விடும் என்றும் சொல்லி இருக்கிறார்கள். நான் சில மிருகக் காட்சி சாலைகளில் அன்னப் பறவையைப் பார்த்தேன். அவற்றைப் பராமரிப்பவரிடம் இந்த அன்னத்திற்குப் பால் வைக்கிறீர்களா என்று கேட்டபோது, அவர் கிண்டலாகச் சிரித்தார். அன்னம் நீரில் உள்ள மீன்களையும் புழு பூச்சிகளையும் தின்று வசிக்கும் ஒரு உயிரினம் என்றும், பாலைச் சாப்பிடாது என்றும் தெரிவித்தார். எனக்கு ஒரு குழப்பம். நம் முன்னோர்கள் தப்பாகவா சொல்லியிருப்பார்கள் என்று. சில நாட்கள் இதைப் பற்றியே சிந்தித்தேன். ஒரு நாள் சாப்பிடும்போது தோன்றியது அடடா, *அன்னம் என்பதற்கு* *அரிசிசாதம்* என்றும் ஒரு பொருள் ...

சதுரங்கப் போட்டியில் இராணிக்கு இவ்வளவு அதிகாரம் வந்ததன் வரலாறு ..

Image
  இந்திய சதுரங்க போட்டி இந்திய போர்முறையிலிருந்து உருவாகி இருக்கிறது. அதாவது பாரசீகர்களும், முகலாயர்களும், ஆப்கன்களும் அஞ்சிய யானை படை,காலாட்படை, சிப்பாய்வீரர்கள், மந்திரி மற்றும் முதன்மை ஆலோசகர்கள் கொண்ட ஒரு முறை. இதில் ராணிக்கு பெரும் பங்கு இல்லை. அப்படி என்றால் இந்தியாவில் ராணியே இல்லை என்கிறீர்களா? ஏனில்லை?ஜான்சி ராணி , ருத்ரமாதேவி வேலு நாச்சியார் போன்றவர்கள் எல்லாம் ராணிகளாக இருந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 5-ம் நூற்றாண்டு வாக்கில்தான் இந்தியாவில் சதுரங்கம் உருவாகிய விளையாடிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். சதுரங்கா, வல்லாட்டம் என செஸ் போட்டிக்கு அப்போது சில பெயர்களும் இருந்திருக்கிறது. செஸ் உருவானது என்னமோ இந்தியாவில் தான் என்றாலும் கிட்டத்தட்ட அப்போது மக்கள் விளையாடுவதற்கு போட்டியில் ராணி என்ற காயே இல்லை. ராணி இல்லாமல் சுமார் 400க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக இந்தியாவில் செஸ் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்கள். முதன்மை ஆலோசகர் அப்போ ராணிக்கு பதிலாக எந்த காய வைத்து விளையாடினார்கள் என்றால் ராஜாவுக்கு பக்கத்தில் வீசர்( (Viezer) எனப்படும் அரசு ஆலோசகர் என்ற காய் இருந...