நிறுத்து .................!
இன்னும் சிறிது நேரம் தான் ….. பூமி சிதறப் போகிறது …….. நாலரைகோடி ஆண்டுகளின் அடையாளச் சின்னங்கள் அழியப் போகிறது ……….. இதோ தொடங்கிவிட்டது பூமிக்குள் ஒரு குருஷேத்திரம்....... ஈஸ்வரா ……! அல்லா …….! ஜீசஸ் …….! கதறல்கள் காட்டில் சமாதி ஆயின, வான் இடியில் பூமி நடுங்கியது , மேக அலையில் கடல் நனைந்தது பூமி தாய் வயிற்றில் சுமந்த அக்னி கரு கலைந்தது …… நிலத்தையும் கடலையும் எரித்தது பறவைகளும் விலங்குகளும் கூகுரல் எழுப்பின.... குன்றுகள் பெயர்ந்தது பூமிகள் பாலம் பாலமாய் வெடித்தது அய்யோ........! அம்மா.......! அவலக்குரல்கள் கேட்டன.... அவரவர் வீடு அவரவர் கல்லறை பூமியில் சுழற்சி இட வலமா...... வல இடமா ……. சந்தேகம் எழுப்பியது பிரமீடுகள் பெயர்த்து பிடுங்கி மம்மிகளை வெளியே தள்ளியது …… உள்ளே புதிய பிணங்கள் போடப்பட்டன சாய்ந்து நிமிர்ந்த போது அட்லாண்டிக் பாலைவனமானது ,,,,, சஹாரா பாலை சமுத்திரமானது ……. சீன பெருஞ்ச...