Posts

Showing posts from October, 2021

திருநெல்வேலி ஒரு பார்வை..

Image
உங்களுக்கு இருட்டுகடை அல்வா வேண்டுமென்றால் அது நெல்லையப்பர் கோவில் அருகில் இருக்கும் பெயர் பலகை கூட இல்லாத ஒரு சிறிய கடையில் சாயங்காலம் 6 மணியில் இருந்து இரவு 8 மணிவரை மட்டுமே கிடைக்கும் . நீங்கள் கடை திறக்கும் முன்பே சென்று வரிசையில் நின்றால் தான் கிடைக்கும். வேறு எங்கும் திருநெல்வேலியில் இருட்டு கடை அல்வா கிடைக்காது. நம்பி ஏமாந்துவிடாதீர்கள். இதுதான் அந்த கடை கூட்டத்தை பார்த்திர்களா? அதை வைத்து அடையாளம் கண்டுகொள்ளலாம். 2. சுற்றுலா பயணிகள் இவ்வளவு மெணக்கிட்டு நேரம் செலவளித்து அல்வா வாங்கி சாப்பிடுவது கடினம் . இருட்டு கடை அல்வாவிற்கு அடுத்தபடியாக ஒரிஜினல் திருநெல்வேலி அல்வா என்ற பெயர் பெற்றது சாந்தி சுவீட்ஸ் அல்வா. ஆனால் திருநெல்வேலி பஸ் ஸ்டான்டிலும் , ரயில் நிறுத்ததிலும் நீங்கள் திரும்பும் திசையெல்லாம் சாந்தி ஸ்வீட்ஸ் என்ற பெயரில் தான் கடைகள் இருக்கும் இதில் ஒன்று கூட உண்மையான சாந்தி ஸ்வீட்ஸ் கிடையாது. உண்மையான கடை திருநெல்வேலி ரயில் நிறுத்தம் அருகில் மட்டுமே உள்ளது . அவர்களுக்கும் வேறு எங்கும் கிளைகள் கிடையாது. இதுவே அந்த கடை எப்போது சென்றாலும் குறைந்தது 10 பேராவது நின்று அல்வா வாங்க...

சோர்வான உங்களுக்காக...

Image
ரத்தன் டாடா சொன்ன வரிகள் "இரும்பை வேறு எந்த பொருளாலும் அழித்துவிட முடியாது. இரும்பு அழிய வேண்டுமென்றால் துருப்பிடித்து அதுவாகவே அழிந்தால் தான் உண்டு. இதேதான் நமக்கும்." நம் சிந்தனை சிதைந்து நாமாகவே அழிந்தால்தான் உண்டு. நாம் உறுதியாக நின்றுவிட்டால் எப்பேர்ப்பட்டவனாலும் நம்மை அழித்துவிட முடியாது. எவ்வளவு பெரிய சோதனையாலும் நம்மை வீழ்த்திவிட முடியாது. நாம் முடங்குவதாகவும், தோற்பதாகவும் உருவாகிற தோற்றங்கள் எல்லாம் தற்காலிகமானவை.எந்த வெற்றியும் நிலையானது இல்லை எந்தத் தோல்வியும் நிரந்தரமானது இல்லை. இன்றைக்கு வேண்டுமானால் எதிரியின் கை ஓங்கி இருக்கலாம். நம் துக்கத்தின் அளவு உயர்ந்து இருக்கலாம். அது நிரந்தரமான ஓங்குதல் இல்லை. அது வலிமையான துக்கமில்லை. துக்கத்தின் சுவடு நிச்சயமாகக் கரையும். எனக்கு எப்பொழுதெல்லாம் மனம் சோர்வடைகிறதோ அப்பொழுதெல்லாம் இத்தகைய மனிதர்களைத்தான் நினைத்துக் கொள்கிறேன். காய்ச்சல் வந்துவிட்டது. உடலில் சர்க்கரை அதிகரித்து விட்டது; ப்ரஷர் ஏறிவிட்டது என்று முடங்கிக் கொள்வதற்கும் சிறகுகளைச் சுருக்கிக் கொள்வதற்கும் ஆயிரம் காரணங்களை தேடுகிறவர்களுக்கு இவரைப் போன்றவர்கள்தா...

முஸ்லிம்கள் ஏன் பன்றி இறைச்சியை உண்பதில்லை?

Image
    முஸ்லிம்களுக்கு பன்றி இறைச்சி தடைசெய்யப்படுவதற்கான முக்கிய காரணம், யாதெனில் சில உணவு அனுமதிக்கப்பட வில்லை என புனித குர்ஆனில் கூறப்பட்டுள்ளது, வெளிப்படையாக  ஹராம்  என்று அறிவிக்கப்படு கிறது , அதாவது தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் தடைசெய்யப்பட்ட உணவுகளில்  பன்றி இறைச்சி  ஒன்றாகும். இருப்பினும், புனித குர்ஆனில் எழுதப்பட்ட ஒரு விதிவிலக்கு உள்ளது, அங்கு நீங்கள் பட்டினி கிடந்தால் அதை உண்ணலாம் என்றும் பன்றி இறைச்சியைத் தவிர வேறு எதுவும் சாப்பிட எதுவும் இல்லை என்ற நிலையில் அந்த நிலை மாறும் வரை இறைவன் அதை உண்ண உங்களை அனுமதிக்கிறான். திரு குரான்இதழ் 2:174 விளக்கம் . இறைவன் சில உணவுகளை நீங்கள் சாப்பிடுவதை தடை செய்துள்ளான் அதாவது தானாக இறந்த பறவைகள் விலங்குகள் , இரத்தம் மற்றும் பன்றியின் மாமிசம் மற்றும் அல்லாஹ்வின் பெயரைத் தவிர வேறு எதுவும் பயன்படுத்தப்படவில்லை.( ஹலால் உணவுகள் ) ஆனால் தேவையினால் உந்தப்படுபவர், கீழ்ப்படிதல் அல்லது வரம்பை மீறுவது அவருக்கு பாவமல்ல . உங்களை உணர்ந்த இறைவன் மிகவும் அன்பானவன் , மன்னிக்கும் பண்புடையவன் பன்றி இறைச்சி அழுக்கு அல்ல, மாறாக அதில்...