சதுரங்கப் போட்டியில் இராணிக்கு இவ்வளவு அதிகாரம் வந்ததன் வரலாறு ..
இந்திய சதுரங்க போட்டி இந்திய போர்முறையிலிருந்து உருவாகி இருக்கிறது. அதாவது பாரசீகர்களும், முகலாயர்களும், ஆப்கன்களும் அஞ்சிய யானை படை,காலாட்படை, சிப்பாய்வீரர்கள், மந்திரி மற்றும் முதன்மை ஆலோசகர்கள் கொண்ட ஒரு முறை. இதில் ராணிக்கு பெரும் பங்கு இல்லை. அப்படி என்றால் இந்தியாவில் ராணியே இல்லை என்கிறீர்களா? ஏனில்லை?ஜான்சி ராணி , ருத்ரமாதேவி வேலு நாச்சியார் போன்றவர்கள் எல்லாம் ராணிகளாக இருந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 5-ம் நூற்றாண்டு வாக்கில்தான் இந்தியாவில் சதுரங்கம் உருவாகிய விளையாடிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். சதுரங்கா, வல்லாட்டம் என செஸ் போட்டிக்கு அப்போது சில பெயர்களும் இருந்திருக்கிறது. செஸ் உருவானது என்னமோ இந்தியாவில் தான் என்றாலும் கிட்டத்தட்ட அப்போது மக்கள் விளையாடுவதற்கு போட்டியில் ராணி என்ற காயே இல்லை. ராணி இல்லாமல் சுமார் 400க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக இந்தியாவில் செஸ் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்கள். முதன்மை ஆலோசகர் அப்போ ராணிக்கு பதிலாக எந்த காய வைத்து விளையாடினார்கள் என்றால் ராஜாவுக்கு பக்கத்தில் வீசர்( (Viezer) எனப்படும் அரசு ஆலோசகர் என்ற காய் இருந...