தாமரை முகம் மலர்ந்து நேரமாகி விட்டது ..... பறவைகள் இரை தேட புறப்பட்டு வெகுநேரமாகி விட்டது ...... என் மனம் படுக்கையை சுருட்ட அடம் பிடிகிறது ........ என் தாய் அழுததைப்போல ஓர் கனவு ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, என்னை சுமந்தவள் இல்லை சுமந்து கொண்டிருப்பவள் .................. ஒருபக்கம் சாதி வெறி கொண்டலையும் மனிதர்கள் ........................! மதம் பேசி திரியும் மதவாதிகள் ..............! ஏமாற்றி சுருட்டும் பன்முக அரசியல்வாதிகள் ......! இவர்களின் வெதுவெதுப்பில் குளிர் காயும் அதிகாரிகள் ........! மறுபக்கம் பசி,பட்டனி,பிணியால் வாடும் அப்பாவி மக்கள் ...................... திடீரென்று நடக்கும் கலவரங்கள் ............அதில் பூ , பொட்டிழகும் இளம் தாய்கள்........ வன்முறையால் தாய் ,தந்தை இழக்கும் இளம் சிசுக்கள் ......... இவைகளை நினைத்து கண்ணீர் வடிக்கிறாள் .......... என் தாய் ............................. நண்பனே ............ நமை கருவில் சுமந்தால் மட்டும் தான் தாயா ....? இவள...