Posts

Showing posts from February 16, 2016

போதையில் மிதந்த மேதையின் உள்ளத்தில் உதித்த பாடல்கள் ஒரு பார்வை...

Image
இன்றும் எம் உதடுகள் முணுமுணுக்கும் போதையில் மிதந்த மேதையின் உள்ளத்தில் உதித்த பாடல்கள் ஒரு பார்வை... பூஜ்ஜியத்துக்குள் கவி ராஜ்யத்தை ஆண்டு இணையற்ற கவிஞர் என்ற தனித்துவ கொடியை ஏந்தி காலத்தால் அழியாத தத்துவ ஞானியாக வாழ்ந்து நினைவில் நீங்காது நிலைத்து நிற்கும் கவிஞர் கோ. கண்ணதாசனுக்கு நிகராக இனித்தான் எவரும் பிறக்க வேண்டும் என்பது அவர் பால் ஈர்க்கப்பட்டோரின் முடிவாகும். 1949ல் ‘கன்னியின் காதலி’ என்ற படத்துக்குத் தனது கன்னிப் பாடலை எழுதியதன் மூலம் சினிமாப் பாடலாசிரியராக அறிமுகமானார். நவரசங்களையும் அதற்கு அப்பாலும் தொட்டுபாடல் எழுதி தனது காவியங்களால் மானிட உள்ளங்களில் மதிப்போடு கட்டுண்டார். கவிஞரது முதல் மனைவி பொன்னழகி அம்மையாரின் இயல்புகளை சிந்தித்துக் கொண்டிருந்த கண்ணதாசனின் உள்ளத்தில் உதித்த எண்ணத்தின் அடிகள் தான். உண்ணும் அழகைப் பார்த்திருப்பாயே உறங்க வைத்தே விழித்திருப்பாயே கண்ணை இமை போல் காத்திருப்பாயே காதல் கொடியே கண் துயில்வாயே என்ற அடிகள் இவை. பாலும் பழமும் படத்தில் அமரர் சிவாஜிகணேசனின் நடிப்பாற்றலால் பெருமைபெற்று இன்றும் இதழ்களில் நடமாடிக் கொண்டி...