Posts

Showing posts from July, 2013

நமது வரலாற்றின் கறைகள்! தேவதாசி முறை!

Image
நமது வரலாற்றின் கறைகள்! தேவதாசி முறை! தேவதாசி என்பவர்கள் பெரும் கோயில்களில் நடனமாடுவதற்காக சிறுவயதில் நேர்ந்து விடப்படும் பெண்களைக் குறிக்கும் சொல். இச்சொல் தேவன் (இறைவன்) + தாசி (அடிமை) = இறைவனின் அடிமை என்ற பொருள்படும். இவ்வழக்கம் 1930களுக்கு முன்பு வழமையாக இருந்தது. இந்த முறை கோயில் பணிகளுக்காக ஏற்படுத்தப்பட்டதாக இருந்தாலும், பின்னாட்களில் இவர்கள் கோயில்களை நிர்வாகித்த மேல் வர்க்கத்தினருக்கு  அல்லது அரசர், செல்வந்தர் போன்றவர்கள் முன்பு நடனமாட வைக்கப்பட்டதுடன் அவர்களுடைய பாலியல் இச்சைகளுக்கு அடிமைகளாகவும் பயன்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக இவ்வழக்கத்துக்கு 1920 முதல் இந்தியாவில் பாரிய எதிர்ப்பு இருந்தது, அதன் காரணமாக 1947 ஆண்டில் தேவதாசி ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஒழுக்கம், கற்பு என்னும் கருத்துக்களில் ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி என்ற ஒரு தலைப்பட்ட நீதி வழக்கிலிருப்பதை வெளிப்படையாகக் காட்டும் நிறுவனமே தேவதாசி முறையாகும். இது ஆண்களின் வசதிக்காகவும், அவர்களின் இச்சையை அவர்கள் விருப்பப்படி பூர்த்தி செய்யவும், பெண்கள் சமூகத்தை மூளைச்சலவை செய்து ஏற்படுத்தப்பட்ட ஒரு கொ...

சிதம்பர ரகசியம்! பகுதி-2

Image
சிதம்பர ரகசியம்! பகுதி-2  உலகில் உள்ள எல்லா ATOM REACTOR களும், சிவனின் லிங்க வடிவில் மட்டுமே உள்ளது என்ற செய்தியுடன் இந்த பகுதியை துவங்குவோம், அதாவது அணு என்பது தான் உலகின் தொடக்கம், அதனால் உலகை அழிக்கவும் முடியும். ஒவ்வொரு அணுவிற்குள்ளும் உள்ள பரமாணு (Sub atomic particle) (ப்ரோட்டான் =>குவார்க் =>க்ளுவான்), ஒரே இடத்தில் இல்லாமல் நகர்ந்து கொண்டே இருக்கும் தன்மையுடையது, இந்த செயலின் மூலம் ஆக்கல் ,அழித்தல் என்ற இரண்டு செயல்பாடுகளுமே நடைபெறுகின்றது. இது இயற்பியல் விதி. இந்த உலகம் என்பதே தடை ஏதுமில்லாத நகர்ந்துகொண்டிருக்கும் அணுக்களால் ஆனதே. தில்லை நடராஜரின் இந்த "ஆனந்த தாண்டவம்" என்ற நிலையை, உலகின் பல இயற்பியல் அறிஞர்கள் "COSMIC DANCE" என்று அழைக்கின்றனர். அறியாமையை காலில் மிதித்துக்கொண்டு ஆனந்த தாண்டவ கோலத்தில் நடராஜர் நான்கு கைகளுடன் ஆடிக்கொண்டிருப்பதை அணுவின் செயல்பாட்டுடன் ஒப்பிடுகின்றனர். அதாவது அணுவின் கட்டமைப்பான (Sub atomic particle ) எப்படி ஒரே இடத்தில் இல்லாமல் நகர்ந்து கொண்டே உள்ளதோ, அதே போன்று "ஆடல் கடவுள்" என்று அழைக்கப்படும் நடராஜர் ஒ...

சிதம்பர ரகசியம் - நம் முன்னோர்களின் அதிசயம்

Image
சிதம்பர ரகசியம் - நம் முன்னோர்களின் அதிசயம்  கீழே கொடுக்கப்பட்டுள்ளது தான் உண்மையிலேயே சிதம்பர ரகசியமா என்பது அந்த நடராஜர் க்கு மட்டுமே வெளிச்சம் - இருப்பினும் இப்படியும் நம் முன்னோர்களால் செய்ய முடிந்ததா ? எப்படி இதை செய்தார்கள் - என்பதே பெரும் ரகசியம் தான் .... இணையத்தில் இதை படித்து விட்டு என்னை தொற்றி கொண்ட வியப்பு இன்னும் விலகவில்லை  முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனை யை நோக்கியே பயணித்துள்ளது..அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்கள் சிலவற்றை நாம் அறிவோம் ..பல வற்றை அறிய விஞானம் -ஆராய்ச்சி இருந்தும் அதன் முக்கியத்துவம் புரியாததால் சீண்டுவார் இல்லாமல் இருக்கின்றன ... அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்...அறிவியல்,பொறியியல், புவியியல்,கணிதவியல்,மருத்த ுவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.... (1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator )...