Posts

Showing posts from April, 2022

அரசியலில் அதிகபட்ச நேர்மையானவர் ...

Image
  தமிழகத்தில் 12 துறைகளுக்கு அமைச்சராக இருந்தவர் திரு.கக்கன் ! இந்திய அரசியல் சாசன அவையின் உறுப்பினர். இந்தியாவின் முதல் நாடாளுமன்றத்தின் உறுப்பினர், கோயில் நுழைவுப் போராட்ட வீரர், காங்கிரஸ் கட்சித் தலைவர், தமிழக சட்டமன்ற உறுப்பினர். காமராஜர் தலைமையில் அமைந்த காங்கிரஸ் ஆட்சியில் 1957 முதல் 1967 வரை 10 ஆண்டுகள் பொதுப் பணித்துறை, காவல்துறை, சிறைத்துறை, அறநிலையத்துறை உள்ளிட்ட  12 முக்கிய துறைகளுக்கு அமைச்சராக இருந்தார் !   இப்படி பல பதவிகளை வகித்தாலும், எளிமையாகவே வாழ்ந்து மறைந்த தமிழகத் தலைவர். இப்படியொருவர் தமிழகத்தில் ரத்தமும் சதையுமாக இயங்கியிருக்கிறார் என்று சொன்னால் அதை இன்றைய தலைமுறையினர் நம்புவார்களா என்பதே சிரமம்தான். மதுரை மேலூர் அருகே தும்பைப் பட்டி கிராமத்தில் உள்ளூர் பூசாரிக் குடும்பத்தில் பிறந்தவர் கக்கன். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர். எஸ்.எஸ்.எல்.சிக்குப் பிறகு படிப்பைத் தொடரமுடிய வில்லை. ஆனால் மதுரை சுதந்திரப் போராட்ட வீரரும் காங்கிரஸ் தலைவருமான திரு.அ. வைத்தியநாத ஐயரின் அறிமுகம் கக்கனுக்குக் கிடைத்தது. 1934ல் மதுரைக்கு வந்த மகாத்மா காந்தியைச் சந்தித்த க...

அனுபிஸ் . ...பாதாள உலகின் கடவுள்

Image
         ஹிந்து மதத்தின் உச்ச காலத்தில் எகிப்து நாட்டின் பாரம்பரிய மதத்தின் ஒரு கடவுள் தான்  அனுபிஸ்  .  பாதாள உலகின் கடவுளும் , எகிப்தின் தர்மதேவனும் இறப்பின் கடவுளும் அவர் தான்.  அவர் கையில் எப்போதும் ஒரு செங்கோல் நேர்மையாக பாதாள உலகை ஆளவும் , மறு கையில்  ஆங்க்  என்ற மந்திர சாவியும் வைத்திருப்பார். எகிப்திய கடவுள்களும் , அரசர்களும் அந்த சாவியை வைத்திருப்பார்கள். ஓசிரிஸ்   கடவுளுக்கு தன் சகோதரியான  ஐசிஸ் தேவதை  என்ற மனைவி இருந்தாள். ஆயினும் ஓசிரிஸ் கடவுளுக்கு தன் மற்றொரு  சகோதரி நெப்தீஸ் தேவதை  மூலம் ஒரு குழந்தை பிறந்தது , அந்த குழந்தைக்கு ஓசிரிஸின் மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. நெப்திஸ் தேவதை தன்  கணவன் சேத் கடவுளுக்கு  பயந்து அக்குழந்தையை அங்கேயே விட்டு விட்டாள். அக்குழந்தையை சுற்றி நாய்கள் நின்றன. பரிதாபப்பட்டு ஐசிஸ் தேவதை அந்த குழந்தையை எடுத்து அனுபிஸ் என்று பெயரிட்டு வளர்த்தாள். அனுபிஸ் ஐசிஸ் தேவதையின் பாதுகாவலானாகவும் இருந்தான். இவ்விவகாரம் சேத் கடவுளுக்கு தெரிய அவர் ஓசிரிஸ் கடவுளை கொன்று விட...

திருமணத்தின் வரலாறு

Image
     திருமணம் என்பது குறைந்த பட்சம் 4,350 ஆண்டுகள் பழமையானது என்று நமக்கு கிடைக்கப்பெற்ற சான்றுகள் கூறுகின்றன. ஆனால் அதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே திருமணம் செய்யும் வழக்கம் தோன்றியிருக்கலாம் என்று பெரும்பாலான மானுடவியலாளர்கள் நம்புகிறார்கள். அவ்வாறு நடந்த திருமணங்களின் முதன்மை நோக்கங்கள் - ஒரு ஆணை குறைந்த பட்சம் ஒரு பெண்ணுடனாவது பிணைப்பதும், இந்த பந்தத்தில் பிறக்கும் குழந்தைகள் உண்மையிலேயே அந்த ஆணுடைய உயிரியல் வாரிசுகள் தான் என்பதை உறுதிப்படுத்துவதும். காதலோ, தனக்கு ஒரு வாழ்க்கை துணை வேண்டும் என்பதோ இவற்றின் நோக்கமாக இல்லை. "சந்ததிகளை உருவாக்க என் மகளை இன்ன விலைக்கு தாரை வார்த்து கொடுக்கிறேன்" என்று தந்தை சட்டப்படி மணமகனோடு ஒப்பந்தம் செய்வார். மணப்பெண்ணின் விலையை மாப்பிள்ளை, பெண்ணின் தந்தைக்கு தருவது சில நாகரீகங்களிலும், மோதிரமாக செய்து மணப்பெண்ணின் விரலில் அணிவிப்பது சில நாகரீகங்களிலும் வழக்கமாக இருந்தது. இந்த ஒப்பந்தத்தை மீறினால் பெண்ணின் தந்தைக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு திருமணம் செய்த தன் மனைவியை, பெற்ற பிள்ளைகளை மற்றவர்களுக்கு விற்கவும் க...