பொதிகை மலை காடுகள்

 அலுவலகம் , வேலை ,தொலைபேசி இவைகளில் இயந்திர மயமான வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் ஒரு நாலாவது இவைகளை புறம் தள்ளி இயற்கையோடு வாழ்ந்து பாப்போம் ..இந்த எண்ணத்தின் வெளிப்பாடு பொதிகை மலை நோக்கி ஒரு பயணம் ..


காலை 9 மணிக்கு திருநெல்வேலி வீரவநல்லூரில் தொடங்கிய பயணம் பாபநாசம் நோக்கி தொடந்து மேற்கு தொடர்ச்சி மலையின் பொதிகை மலை அடிவாரத்துக்கு 11மணியளவில் அடைத்தோம் .. அன்று மழை கொஞ்சம் குறைவு வானம் வெளுத்து தான் காணப்பட்டது. அடிவாரத்தில் வன பாதுகாவலர்களின் சோதனைகளை முடித்து கொண்டு மெள்  நோக்கி எங்கள்  பயணம் தொடங்கியது ..

பூமி தாய்க்கு பச்சை நிற கம்பளம் விருக்கும் காடுகள் ,சில்லென்ற காற்று , நிசப்தமான காட்டு பாதையில் ஆங்காங்கே பறவைகளின் சப்தம் , பூத்து குலுங்கும் மலர்கள், வெள்ளி சரிகை தரித்து ஓடும் சிறு நெடு ஆறுகள் ,பார்ப்பவை எல்லாம் மனதை மயக்கும் பொதிகை மலை 


வர்ணிக்க வார்த்தை இல்லை இந்த வர்ணக்கோலம் பூண்ட பொதிகை மலை அன்னையின் அழகை ..


மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல் 

காடும் உடையது அரண் .என்று திருவள்ளுவர் நமக்கான அரண் என்ன என்பதை அழகாக குறிப்பிட்டு இருக்கிறார் .கிட்டத்தட்ட 6120 அடி  உயரம் ,3500 சதுர கிலோ மீட்டர் தமிழ்நாட்டிலும் ,கேரளாவிலும் பரவி காணப்படும் பசுமை காடு .நூற்று கணக்கான அபூர்வ விலங்குகள் ,பறவைகள் ,ஊர்வன மற்றும் பல்லாயிர கணக்கான தாவர இனம் ,இரண்டாயிரத்துக்கும் மேல் மருத்துவ குணம் கொண்ட மூலிகை செடிகள் பொதிகை மலையின் பிரசாதம் .



பொதிகை மலையில் அமர்ந்து அகத்திய முனிவர் தமிழ் வளர்த்ததாக வரலாறுகள் குறிப்பிடுகின்றன 

மலை உச்சியில் அவருக்கென்று தனி ஆலயமும் அமைந்துள்ளது பொதிகை மலைக்கு கூடுதல் புகழ் .மேலும் தமிழகத்தின் முக்கிய நதியான தாமிர பரணி மலை உச்சியில் தான் உற்பத்தியாகிறது .


அழகான ரம்மியமான இயற்கை ரசித்த இன்பத்துடன் மலை இறங்குகிறோம் ...

Comments

Popular posts from this blog

அலெக்ஸாண்ட்ரியா நூலகம் (Library of Alexandria)

ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!!

முருங்கை கீரை